Tuesday, October 19, 2010

பிரபல எழுத்தாளருக்கு பகிரங்கக் கடிதம்

பெருமதிப்பிற்குரிய பிரபல எழுத்தாளர் ஜான் சீனா அவர்களுக்கு,

உங்களுடைய பரம வெறியன் தூக்கநாயக்கன்பாளையம் துரைசாமி எழுதும் கடிதம். பல ஆண்டுகளாக உங்களுடைய எழுத்தை தொடர்ந்து வாசித்தாலும் இதுதான் நான் உங்களுக்கு எழுதும் முதல் வாசகர் கடிதம்..அப்போதாவது இதை நிச்சயம் நீங்கள் உங்களுடைய வலைப்பூவில் வாரந்தோறும் வருகிற மண்ணுசைவம் பதிவில் போட்டு என்னை பிரபலமாக்குவீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த கடிதத்தை என் ரத்தத்தால் எழுதியுள்ளேன். பி பாஸிட்டிவ் குரூப்.

என்னுடைய மூன்று வயது பையன் உங்களை விடவும் அருமையாக எழுதுகிறான்.ஆனாலும் நான் ஏன் உங்கள் எழுத்தை வாசிக்கிறேன். இப்படி ஒரு கேள்வி பல ஆண்டுகளாக தொடர்ந்து எழுந்தாலும் அதற்கான காரணம் இப்போதுதான் புரிந்தது. நீங்கள் ஒரு மகான்.காந்தி,நேரு,நேதாஜி,விஜயகாந்த்,அர்ஜுன் இவர்களுக்கு பிறகு நம் நாட்டின் மீது அதிக பற்றுக்கொண்ட தேசபக்தி எழுத்து உங்களுடையது. சோராமசாமி,டிராபிக்ராமசாமி,விகேராமசாமிக்கு பிறகு நம் மக்களின் மீது பற்றிகொண்ட எழுத்து உங்களுடையது. நயன்தாரா,ஷகிலா,சிந்து,மரியா,பரவை முனியம்மா மாதிரி கவர்ச்சி கொட்டிய டபுள் எக்ஸ் எழுத்து உங்களுடையது. அதுதான் காரணம்.

உங்கள் வலைப்பூவினை வாசிப்பதற்கு முன்னால் எனக்கு வேலை கிடையாது. சாப்பாட்டுக்கே வழியில்லை.உங்கள் வலைப்பூவில் கி.பி.2009ல் டிசம்பர் மாதம் வெளியான ஒரு பதிவில் நீங்கள் வேலை வெட்டியில்லாமல் மோட்டு வளையை பார்த்தபடி பல ஆண்டுகள் ஓசியிலேயே உடம்பு வளர்த்ததைப் பற்றி விரிவாக எழுதியிருந்தீர்கள். அதைப்படித்து உடம்பு சிலிர்த்து நானும் உங்களைப்போல் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் வெட்டியாகத்தான் இருக்கிறேன். ஆனால் உங்களைப்போலவே ஓசி சோத்துக்கு வழி பண்ணிவிட்டேன். காரணம் நீங்கள் நீங்கள் மட்டும்தான். உங்களால்தான் என் வாழ்க்கையில் மாற்றம் உண்டானது.

நாம் ஏற்கனவே சந்தித்திருக்கிறோம். உங்களுக்கு நினைவிருக்காது. தினமும் மெரீனா பீச்சிலும்,ஸ்பென்சர் பிளாசாவிலும்,கோவிலிலும்,சர்ச்சிலும்,மசூதியிலும் பல நூறு வாசகர்களை சந்திக்கும் உங்களுக்கு என்னை நினைவிருக்காது. நான் ஒரு முறை வில்லிவாக்கம் டாஸ்மாக்கில் உங்களிடம் ஓசி ஊறுகாய் கேட்டிருக்கிறேன். அதைப்பற்றி நீங்கள் கி.பி.2008 மார்ச் ஆறாம்நாள் எழுதிய ஓசி ஊறுகாயும் ஒரு குவாட்டர் கட்டிங்கும் என்கிற பதிவில் நான் ஓசியில் வாங்கிய ஊறுகாய் பாக்கட் குறித்து எழுதியிருந்தாலும் அதை வாங்கிய என்னைப்பற்றி ஒரு வரி கூட எழுதவில்லையே.

நீங்கள் எழுதியிருந்த பக்கத்தூட்டு ஆயா இடியாப்பத்துக்கு பாயா சிறுகதையை படித்து அழுதுவிட்டேன்.அதிலும் அந்த பாயா அந்த ஆயாவிற்கு கிளைமாக்ஸில் கிடைக்காமல் போவது மிகமிக டச்சிங்! நான் சுஜாதாவிடம் பார்த்த அந்த துள்ளலும் எள்ளலும் நக்கலும் உணர்ச்சியும் உங்களிடம் மட்டும்தான் இருக்கிறது. டேய்.. நீ எழுத்தாளன்டா.. சாரி என்னை மன்னித்துவிடுங்கள் ஒரு எமோசனில் டா போட்டுவிட்டேன். அந்த கதையை ஏன் இப்படி முடித்தீர்கள். பாவம் அந்த ஆயா. உங்களை சரிதான் போயா என்று உரிமையோடு திட்ட வேண்டும் போல இருந்தாலும்,உங்களுடைய எழுத்தில் சப்பணமிட்டு அமர்ந்திக்கும் ஷகிலாவும் ஜோதிகாவும் என்னை தடுத்து நிறுத்திவிட்டனர். டேய் நீ உலகமகா எழுத்தாளன்டா!டே..

நீங்கள் ஏன் நாவல் எழுதக்கூடாது. உங்களுக்கு அதற்கான சகல தகுதிகளும் இருக்கிறது. தயவுசெய்து நீங்கள் அடுத்த ஆறுமாதத்திற்குள் நாவல் எழுதாவிட்டால் வீடு தேடிவந்து உங்களை நடுரோட்டில் போட்டு நாயடிப்பதை போல அடித்துவிடுவேன் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். தயவு செய்து எழுதுங்கள்.ஏன் கடந்த சில நாட்களாக எதுவுமே எழுதுவதில்லை. உங்கள் வலைப்பூவை ஒவ்வொரு மைக்ரோ விநாடிக்கும் ஒரு முறை ரிப்ரஷ் செய்து செய்து என்னுடைய விரல் இரண்டு சென்டிமீட்டர் தேய்ந்துவிட்டது.
ஆனாலும் உங்களுக்கு மட்டும் எப்படி ஒரு நாளைக்கு பத்தாயிரம் ஹிட்ஸ் கிடைக்கிறது. மற்றபடி உங்கள் எழுத்தை நேசிக்கும் நூறு கோடி தமிழர்களுக்காகவும் ஐநூறு கோடி இந்தியர்களுக்காகவும் பல கோடி மனிதர்களுக்காகவும் தயவு பண்ணி எழுதுங்க. அதேபோல எப்படி வலைப்பூ ஒன்றை ஆரம்பிப்பது என்று சொல்லிக்கொடுத்தால் உங்களைப்போலவே நானும் மிகப்பெரிய எழுத்தாளன் ஆவேன்.

நீங்கள் கொடுத்த முப்பது ரூபாவுக்கு இவ்வளவுதான் முடியும். தொகையை அதிகமாக்கினால் இன்னும் நிறைய கூவுவேன் என்று உறுதியளிக்கிறேன்.

நன்றி

துரைசாமி

18 comments:

சுபத்ரா said...

ஹா ஹா ஹா.. கலக்கல் காமெடி ;-)

Why word verfication?

Stock said...

////நீங்கள் ஏன் நாவல் எழுதக்கூடாது.////
அதுல உள்ள எழுத்துப் பிழைகளை திருத்துரவன் செத்தான்..

எண்ணங்கள் 13189034291840215795 said...
This comment has been removed by the author.
எண்ணங்கள் 13189034291840215795 said...

ஹா ஹா ஹா:)

------------------------



ஜாக்கிசேகரின் உலகமஹா சேவை..:))

http://punnagaithesam.blogspot.com/2010/10/blog-post_21.html

முத்துசிவா said...

//தயவுசெய்து நீங்கள் அடுத்த ஆறுமாதத்திற்குள் நாவல் எழுதாவிட்டால் வீடு தேடிவந்து உங்களை நடுரோட்டில் போட்டு நாயடிப்பதை போல அடித்துவிடுவேன் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். தயவு செய்து எழுதுங்கள்.//

சூப்பர்

ரவி said...

புள்ளைப்பூச்சியான ஜாக்கியை போல் இப்படி கும்முறாங்களே என்று கவலையோடு பார்த்தால்.

வரிக்கு வரி வயிற்றை புரட்டிக்கொண்டு சிரிக்கவேண்டியிருக்கு.

இதுக்கு தனி பேட்டா எதுவும் இருக்கா இந்த வலைப்பூவில் ?

எங்கிருந்துய்யா கெளம்புறீங்க !!! ரூம் என்ன ? ஒரு ஓட்டலே புக் பண்ணி யோசிச்சு எழுதுனாலும் முடியாதுய்யா முடியாது.

எண்ணங்கள் 13189034291840215795 said...

http://jackiesekar.blogspot.com/2010/04/dont-look-down-18.html

http://cablesankar.blogspot.com/2010/05/no-mires-para-abajo-2008.html

http://jackiesekar.blogspot.com/2009/04/blog-post_8746.html#comments
--------------



படத்தின் சென்சார்டு போட்டோஸ் இங்கே சொடுக்கவும்...1 18+

படத்தின் சென்சார்டு போட்டோஸ் இங்கே சொடுக்கவும்...2 18+

படத்தின் சென்சார்டு போட்டோஸ் இங்கே சொடுக்கவும்...3 18+

படத்தின் சென்சார்டு போட்டோஸ் இங்கே சொடுக்கவும்...4 18+

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஒருவர் கேள்வி கேட்டிருக்கார் . பதில் சொல்லிடுங்க உங்க பாணியிலேயே..:))

-------------------------------------

ராம்ஜி_யாஹூ has left a new comment on your post "ஜாக்கிசேகரின் உலகமஹா சேவை..:))":

இந்த பதிவிற்கு தொடர்பு இல்லாத செய்தி இது, பழைய பதிவிற்கு தொடர்பு உடைய செய்தி.
நீங்கள் எளிமையாக மேம்போக்காக சொல்லி விட்டு போய் விட்டர்கள். என் மனதை அது இன்னமும் தொந்தரவு செய்து கொண்டு தான் இருக்கிறது.

காம ஜோக்குகள் படிப்பதற்கே சிலர் சில பதிவர்களை தேடி வருகிறார்கள் என்று. நீங்கள் சொல்வது என் அனுபவத்தில் மிக உண்மை.
நான் ராஜநாயகம் (kernel thoughts)என்ற ஒரு பதிவரின் காம ஜோக்குகளுக்கவே அவர் பதிவை தேடி படிப்பேன், ஏனென்றால், அவர் எழுதும் ஜோக்குகள் கூகுளே இல் தேடினால் கிடைக்காது.

எண்ணங்கள் 13189034291840215795 said...

http://jackiesekar.blogspot.com/2010/10/18.html

ஜாக்கிண்ணாவின் கவலை...

Unknown said...

மிஸ்டர் பயணமும் எண்ணங்களூம் எதற்கு தேவையில்லாம. கேபிள் பதிவை லிங்க் கொடுத்திருக்கிறீர்கள்.

உண்மைத்தமிழன் said...

இப்ப உங்களுக்கு என்னங்க வேணும்..? ஜாக்கிதான் அவரோட பதிவுல "18+ வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், வாழ்க்கை பற்றிய புரிதல் உள்ளவர்களுக்கான இடம் இது" - இப்படி போட்டிருக்காருல்ல.. விருப்பம் உள்ளவங்க படிச்சிட்டுப் போறாங்க. இல்லைன்னா படிக்காமயே போகட்டும். உங்களை கையைப் பிடிச்சிழுத்து படிக்கச் சொல்லலியே..

அவருடைய படைப்புகளுக்கான விமர்சனம் வேறு. அதை நீங்கள் செய்திருந்தால் எனக்கு வருத்தமிருக்காது.

ஆனால் நீங்கள் ஜாக்கி என்னும் தனி மனிதனையே குறி வைத்துத் தாக்குகிறீர்கள்.

இது முட்டாள்தனமானது..! கொடூரமானதும்கூட..!

உண்மைகள் சுடும் said...

ஆனால் நீங்கள் ஜாக்கி என்னும் தனி மனிதனையே குறி வைத்துத் தாக்குகிறீர்கள்.
////



ஆமா யாரு ஜாக்கி ?? நல்லா எழுதுவாரா?

உண்மைதமிழன் உங்கள் கூற்று
முட்டாள்தனமானது..! பதிவில் எனக்கு வந்த கடிதத்தை வெளியிட்டு இருக்கிறேன்

மங்களூர் சிவா said...

உங்களுக்கெல்லாம் வேலை வெட்டியே கிடையாதா???

மங்களூர் சிவா said...

உங்களுக்கெல்லாம் வேலை வெட்டியே கிடையாதா???

எல் கே said...

உங்களுக்கு வந்த மடலை என்ன விவகாரம் என்றுத் தெரியாமலேயே வெளியிட்டுவிட்டீர்கள் அதுதவறு

இனியா said...

ஜாக்கியை இந்த வாங்கு வாங்குறீங்களே!!!

வெண்பூ said...

இதுக்காக‌வே ப்ளாக் ஆர‌ம்பிச்சிங்க‌ளா? வெள‌ங்கிடும்..

ராம்ஜி_யாஹூ said...

பின்னோட்டங்கள் பார்த்த பிறகுதான் புரிந்தது.

நான் வேறு ஒரு அச்சு எழுத்தாளர் பற்றிய பகடி என்று நினைத்து இருந்தேன்